யுபிஐ முதல் கடன் வரை: தங்களின் நிதி செயல்பாடுகளை மாற்றி வரும் இந்திய சிறு குறு தொழில்கள்
யுபிஐ முதல் கடன் வரை: தங்களின் நிதி செயல்பாடுகளை மாற்றி வரும் இந்திய சிறு குறு தொழில்கள் --------- உமேஷ் அரோரா (தலைவர் – வளர்ந்து வரும் வணிகம், உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி) கோவை, செப். 2- இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை, பணத்தை நிர்வகிக்கும் முறை மற்றும் கடன் பெறும் முறை ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. குறிப்பாக, யுபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள், சிறு வணிகர்கள் பணப்பரிமாற்றம் செய்யும் மற்றும் கணக்குகளைப் பராமரிக்கும் முறையை முற்றிலுமாக மாற்றியுள்ளது. யுபிஐ என்பது வெறும் பணப்பரிவர்த்தனைக்கான வசதி மட்டுமல்ல; அது வியாபாரிகளின் பழக்கங்களை மாற்றி, நிதி ஒழுக்கத்தை உருவாக்கி, லட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கு முறையான கடன் கிடைக்கப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ரொக்கத்திலிருந்து டிஜிட்டலுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பல சிறு தொழில்கள் பெரும்பாலும் ரொக்கப் பணத்திலேயே நடைபெற்றன. வியாபாரம் நன்றாக நடந்தாலும், அதற்கான முறையான கணக்குப் பதிவுகள் இல்லாததால் வங்கிகளில் கடன் பெறுவது சவாலாக இருந்தது. ஆனால் இன்று, ஒவ்வொரு QR கோடு பரிவர்த்தனையும...