உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ‘ZERO TO HERO’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ‘ZERO TO HERO’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் சென்னை, 9 பிப்ரவரி 2026: உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர்ஸ் இணைந்து, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், பூஜ்ஜிய நிலை (Zero Stage) புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் மேலும் நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதம் மற்றும் முழுமையான மீட்சியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் ‘ஜீரோ டூ ஹீரோ’ -‘ZERO TO HERO’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ICMR–NCRP தரவுகள் தெரிவிக்கின்றன. ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும், 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் மூன்றாம் அல்லது நான்காம் நிலையில் இருக்கும்போது நோய் கண்டறியப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ...