ஏர்டெல் ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ சேவையை அறிமுகப்படுத்தியது – வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நெட்வொர்க் அனுபவம் வழங்கும் புதிய முயற்சி
ஏர்டெல் ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ சேவையை அறிமுகப்படுத்தியது – வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட நெட்வொர்க் அனுபவம் வழங்கும் புதிய முயற்சி 5G நெட்வொர்க்கை ஸ்லைசிங் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தி, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த சேவைத் தரமும் தடையற்ற இணைப்பும் வழங்கப்படுகிறது Chennai, மே 19, 2026: பார்தி ஏர்டெல் இன்று ‘பிரையாரிட்டி போஸ்ட்பெய்டு’ என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. 5G ஸ்லைசிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்த சேவை, போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மேலும் மேம்பட்ட மற்றும் நிலையான நெட்வொர்க் அனுபவத்தை வழங்குகிறது. வேலை, பொழுதுபோக்கு அல்லது ஆன்லைன் ஒத்துழைப்பு போன்ற தேவைகளுக்காக இடையறாத இணைப்பை நம்பும் பிஸியான வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக, ஏர்டெல் தனது 5G நெட்வொர்க்கை மேம்பட்ட ஸ்லைசிங் தொழில்நுட்ப திறன்களுடன் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்கிறது, கூடுதல் கொள்ளளவு உருவாகிறது மற்றும் அந்த கொள்ளளவை ‘பிரையாரிட்டி’ வாடிக்கையாளர்களுக்கு உயர்ந்த அனுபவத்தை வழங்கும் வகை...