அப்போலோ கேன்சர் சென்டர் அறிமுகப்படுத்தும் #ஓராலைஃப்

 

அப்போலோ கேன்சர் சென்டர் அறிமுகப்படுத்தும் #ஓராலைஃப் 



வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்கான 

ஸ்க்ரீனிங் திட்டம்  

புகையிலைப் பயன்பாட்டை நிறுத்தும் விரிவான முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஈஷா ஃபவுண்டேஷன் உடன் இணைந்து செயல்படுகிறது 

புகையிலைப் பயன்பாட்டின் செலவையும், அதனால் ஏற்படும் இழப்பையும் முன்னிலைப்படுத்த #CutTheCost என்ற பரப்புரை திட்டத்தை தொடங்குகிறது 

சென்னை: மே 30, 2025: புகையிலை பயன்பாடு என்பது ஒரு தனிநபர் தொடர்பான பழக்கவழக்கம் என்று சுருக்கிவிட முடியாது; இதுவொரு தேசிய அளவிலான சுகாதார பெரும் பிரச்சனை. உலகளவில் ஏற்படும் வாய் புற்றுநோய் நபர்களில் ஏறக்குறைய 3 நபர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் 77,000 நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது மற்றும் 52,000 இறப்புகள் நிகழ்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளை (link) விட நம் நாட்டில் இப்புற்றுநோய் பாதித்தவர்கள் மத்தியில் உயிர்பிழைப்பு விகிதம் வெறும் 50% என்பதாக மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த ஆபத்தான போக்கானது, இந்தியாவின் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் புகையிலை நுகர்வு அதிகரிப்பதால் மேலும் மோசமாகி வருகிறது. பான்பராக், புகையிலை மற்றும் பிற போதைதரும் பொருட்கள் மீது செலவுகள் அதிகரித்து வரும் நிலையில் குறிப்பாக சுட்டிக்காட்டுகின்ற குடும்பங்களுக்கான நுகர்வு செலவு சர்வே (2022-23) (Link) இதனை முன்னிலைப்படுத்துகிறது.  

உலக, புகையிலை இல்லா தினம் அனுசரிப்பையொட்டி, வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது மீது சிறப்பு கவனம் செலுத்துகின்ற ஒரு தன்முனைப்புள்ள ஸ்க்ரீனிங் முன்னெடுப்பான #OraLife என்பதை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் (ACC) தொடங்கியிருக்கிறது. குறிப்பாக புகையிலையைப் பயன்படுத்துபவர்கள், மதுபானம் அருந்துபவர்கள் மற்றும் இதற்கு முன்பு வாயில் நசிவுப் புண்கள் இருந்த நபர்கள் உட்பட அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்காக இலக்குடன் கூடிய இடையீட்டு நடவடிக்கையையும் குறித்த காலஅளவுகளில் ஸ்க்ரீனிங் செயல்பாட்டையும் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வையும் இத்திட்டம் வலியுறுத்துகிறது.  

இந்த முன்னெடுப்பிற்கு மேலும் வலுசேர்க்கும் நோக்கத்தோடு புகையிலையைப் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்து விடுபட விரும்பும் நபர்களுக்கு விரிவான ஆதரவை வழங்குவதற்காக ஈஷா ஃபவுண்டேஷனுடன் ACC கூட்டு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. உடல்நலம் சார்ந்த இடையீட்டு நடவடிக்கைகளை மனநலம் மற்றும் உணர்வுரீதியான நல்வாழ்வு ஆதரவோடு இந்த ஒத்துழைப்பு ஒருங்கிணைக்கிறது. 

புகையிலையைப் பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிடுகையில், புகையிலையைப் பயன்படுத்தும் நபர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 6 முதல் 7 மடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் குழு விவாதத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஒரு எளிமையான வாய் பரிசோதனை வழியாக, வாய் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே எளிதாக கண்டறிய முடியும் என்பதால், 30 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களையும், குறிப்பாக புகையிலையைப் பயன்படுத்தும் நபர்களை குறித்த காலஅளவுகளில் ஸ்க்ரீனிங் சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ளுமாறு #OraLife முன்னெடுப்பு திட்டம் ஊக்குவிக்கிறது. ஆரம்ப நிலையிலேயே வாய் புற்றுநோயைக் கண்டறிவது, வழங்கப்படும் சிகிச்சையின் விளைவுகளையும், உயிர்பிழைப்பு விகிதங்களையும் கணிசமாக மேம்படுத்துகிறது. எனவே தான் புற்றுநோய் வராமல் முன்தடுப்பு செய்வதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும், ஸ்க்ரீனிங் செயல்திட்டத்தைப் பயன்படுத்தி பயனடையுமாறும் பொதுமக்களை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றனர். “நோய் வராமல் முன்தடுப்பு செய்யும் கலாச்சாரத்தை வளர்ப்பதன் வழியாக, வாய் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நம்மால் இயலும்” என்று மருத்துவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சுட்டிக்காட்டினர். 

இந்திய ஆண்கள் மத்தியில் வாய்ப்புற்றுநோய் மிகப் பொதுவான புற்றுநோயாக இருக்கிறது; பெண்கள் மத்தியிலும் இது நிலையாக அதிகரித்து வருகிறது. வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே இந்த நோய் பாதிப்பு விகிதம் பெரிதும் மாறுபடுகிறது. மேற்கு வங்கத்தில் பாதிப்பு விகிதம் அதிகமாக இருக்கும்போது கேரளாவில் இது அதிகமாக இருக்கிறது. மஹாராஷ்டிரா, அகமதாபாத் நகர்பகுதி மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் அதிகரித்த புகையிலை பயன்பாட்டின் காரணமாக, பாதிப்பு விகிதங்கள் அச்சுறுத்தும் வகையில் அதிகமாக இருக்கின்றன. சென்னையை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகள் உடலின் பிற பகுதிகளுக்கு பரவக்கூடிய திறன்கொண்ட பகுதிகளான நாக்கின் அடிப்பகுதி மற்றும் வாயின் தளத்தில் உருவாகும் புற்றுநோய்கள் அதிகரித்திருப்பதை அடையாளம் கண்டிருக்கின்றன. தேசிய அளவில், வாயின் சளிச்சவ்வு மிக அதிகமாகப் பாதிக்கப்படும் அமைவிடமாக அறியப்படுகிறது. குறிப்பாக, புகை வெளிவராத புகையிலையின் பயன்பாடு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வாய் புற்றுநோயில் இதுவரை இருந்தும் வரும் பாலின இடைவெளி குறைவதற்கு இது பங்களிப்பை செய்கிறது (Link).  

புகை வெளிவராத புகையிலை, வெற்றிலையை மெல்வது மற்றும் மதுபானம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து பயன்படுத்துவது போன்ற இடர்க்காரணிகள், முன்தடுப்பு பராமரிப்பிற்கு குறைவான அணுகுவசதி கொண்ட சுகாதார சேவை குறைவாக கிடைக்கப்பெறும் சமூகங்களில் குறிப்பாக அதிகமாக காணப்படுகின்றன. 31-50 வயதிற்கு இடைப்பட்ட நபர்களை இந்நோய் அதிகமாக பாதித்து வருகிறது. குறைவான ஊட்டச்சத்து பிரச்சனையானது, இந்த ஆபத்தை மேலும் தீவிரமாக்குகிறது.  

பயிற்சி பெற்ற மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் தலை கழுத்து அறுவைசிகிச்சை வல்லுநர்களால் நடத்தப்படும் விரிவான பார்வை சார்ந்த மற்றும் தொடுஉணர்வு வாய் பரிசோதனையானது, வாய் புற்றுநோய் ஸ்க்ரீனிங் செயல்திட்டமான #ஓராலைஃப் – ல் இடம்பெறுகிறது. தொடர்ந்து இருக்கின்ற வாய்ப்புண்கள், சிவந்த அல்லது வெள்ளை நிறத்திலான திட்டுகள், கட்டிகள் மற்றும் குணமடையாத புண்கள் போன்ற ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த அறிகுறிகளுள் பெரும்பாலானவை பல நேரங்களில் கவனிக்கப்படாமல் விடப்படுகிறது.  

மனநலம் சார்ந்த மற்றும் உணர்வுரீதியான மீட்சிக்கு ஆதரவு, புகையிலைப் பயன்பாட்டை நிறுத்தும் தனது முயற்சிகளோடு ஆன்மிக நலவாழ்வு அம்சங்களை ஒருங்கிணைக்க ஈஷா ஃபவுண்டேஷனுடன் அப்போலோ கைகோர்த்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சத்குருவால் வழிநடத்தப்படும் ஒரு எளிமையான, அதே நேரத்தில் திறன்மிக்க 7 – நிமிட வழிகாட்டலுடன் கூடிய தியான செயல்முறைக்கான அணுகுவசதியை இதில் பங்கேற்கும் நபர்கள் பெறுவார்கள். 

‘மனதின் அதிசயம்” (Miracle of Mind) என்பது, தங்களது நலவாழ்விற்கு பொறுப்பேற்பதற்கு தனிநபர்களுக்கு திறனளிக்கும் ஒரு இலவச தியான செயலியாகும். 2 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கொண்டிருக்கும் இச்செயலியில், வழிகாட்டலுடன் கூடிய தியானங்கள், தடமறிதல், பிரத்யேக செய்திகள் மற்றும் ஊக்கப்படுத்தும் வெகுமதிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்று ஈஷா ஃபவுண்டேஷனின் செய்தித் தொடர்பாளர் கூறினார். 

“முழுமையான புற்றுநோயியல் சிகிச்சை பராமரிப்பில் அப்போலோவின் தலைமைத்துவ பங்கினை இந்த முன்னெடுப்பு பிரதிபலிக்கிறது. எமது செயல்பாடானது, சிகிச்சை என்பதற்கும் அப்பால் நீள்கிறது. தங்களின் ஆரோக்கியத்தின் மீது பொறுப்பையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க தேவையான கருவிகளையும், அறிவையும் மக்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும். நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே அறிவது மற்றும் மனநலம் ஆகிய இரண்டும் மிக முக்கியமான தூண்களாக இருக்கின்ற ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சைப் பராமரிப்பில் நாங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு ஈஷா ஃபவுண்டேஷனுடனான இந்த ஒத்துழைப்பு ஒரு நல்ல சாட்சியமாகும்.” என்று அப்போலோ கேன்சர் சென்டர் மற்றும் அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரின் (APCC) தலைமை செயலாக்க அதிகாரி திரு. கரன் பூரி கூறினார். 

புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார சுமைக்கும் கூடுதலாக, இதனால் ஏற்படும் நிதி சார்ந்த மற்றும் உணர்வு ரீதியான கடும் பாதிப்பையும் இந்த முன்னெடுப்பு திட்டம் கவனத்தில் கொண்டு தீர்வுகாண முற்படுகிறது. புகையிலையைப் பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிடுகையில், புகையிலையைப் பயன்படுத்தும் நபர்கள் அவர்களது வாழ்நாள் காலத்தில் உடல்நல பராமரிப்பிற்காக ரூ.1.1 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை செலவிடுகின்றனர் என்று ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. புகையிலை பயன்பாட்டின் விளைவுகள் உடல் ஆரோக்கியத்தையும் கடந்து, பிறவற்றையும் பாதிக்கிறது; வாழ்நாள் எதிர்பார்ப்பு காலத்தைக் குறைப்பதோடு, காப்பீடு ப்ரீமியங்களையும் இது அதிகரிக்கிறது. காப்பீடு உரிமைக்கோரிக்கைகளுக்கு, இழப்பீடு வழங்கப்படுவதை மட்டுப்படுத்துவதோடு, குடும்பங்களின் நிலைப்புத்தன்மையும் சீர்கெடுமாறு செய்கிறது. குறிப்பாக, குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும்போது இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கின்றன.  

செலவைக் குறைப்போம் (#CutTheCost) என்ற பரப்புரை திட்டத்தின் வழியாக, தங்களது புகையிலைப் பயன்பாட்டு பழக்கவழக்கங்களின் உண்மையான செலவையும், இழப்பையும் மறுமதிப்பீடு செய்ய புகையிலையைப் பயன்படுத்துபவர்களுக்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் அறைகூவல் விடுக்கிறது. இந்நபர்களது குடும்பத்தின் நிதிசார் பாதுகாப்பையும் மற்றும் உணர்வுரீதியான நலவாழ்வையும் இது பாதிக்கிறது. ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் பாதிப்பை கண்டறிவதன் பயனை இப்பரப்புரை திட்டம் வலுவாக எடுத்துரைக்கிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு அதிக சக்தி வாய்ந்த கருவியாக நீண்டகால வாழ்க்கைமுறை மாற்றம் இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.  

#புற்றுநோயை வெல்வோம்


அப்போலோ கேன்சர் சென்டர்கள் குறித்து – https:// apollocancercentres.com/ 


புற்றுநோய் சிகிச்சையில் செழுமையான பாரம்பரியம்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக,  மக்களுக்கான நம்பிக்கை வெளிச்சம்.  இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சிகிச்சை என்பது, 360-டிகிரி முழுமையான சிகிச்சைப் பராமரிப்பையே குறிக்கிறது. 


இதற்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் மருத்துவ நிபுணர்களின் அர்ப்பணிப்பும், நிபுணத்துவமும் மற்றும் தளராத மனஉறுதியும், ஆர்வமும் அவசியமாகும். உயர்நிலையிலான துல்லியமான புற்றுநோயியல் சிகிச்சை வழங்கப்படுவதை கவனமுடன் கண்காணிக்க இந்தியாவெங்கிலும் 390-க்கும் அதிகமான மருத்துவர்களுடன் அப்போலோ கேன்சர் சென்டர்கள் இயங்கி வருகின்றன. திறன்மிக்க புற்றுநோய் மேலாண்மை குழுக்களின் கீழ் உறுப்பு அடிப்படையிலான செயல் நடைமுறையைப் பின்பற்றி, உலகத்தரத்தில் புற்றுநோய் சிகிச்சையை எமது மருத்துவர்கள் வழங்குகின்றனர். சர்வதேசத் தரத்தில் சிகிச்சை பலன்களைத் தொடர்ந்து நிலையாக வழங்கியிருக்கின்ற ஒரு சூழலில் நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சையை வழங்குவதில் இது எங்களுக்கு உதவுகிறது.  




இன்றைக்கு அப்போலோ கேன்சர் சென்டர்களில் புற்றுநோய் சிகிச்சைக்காக 147 நாடுகளிலிருந்து மக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கின் முதல் பென்சில் பீம் புரோட்டான் சிகிச்சை மையம் என்ற பெருமையை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் கொண்டிருக்கிறது. புற்றுநோய்க்கு எதிரான போரில் ஆற்றலுடன் செயல்பட தேவையான அனைத்து திறன்களையும், தொழில்நுட்பத்தையும் அப்போலோ கேன்சர் சென்டர் கொண்டிருக்கிறது. 


ஊடக விசாரணைகளுக்கு அல்லது மேலதிக தகவல்களுக்கு

 

Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

HCLTech தனது ஆரம்பகால தொழில் திட்டமான TechBee-க்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது