பூமி அமைப்பும் ரியல்மி நிறுவனமும் இணைந்து தொழில்நுட்பம் அடிப்படையிலான கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 80,000 க்கும் மேற்பட்ட இளம் தலைமுறைக்கு அதிகாரம் அளிக்கின்றன

 பூமி அமைப்பும் ரியல்மி நிறுவனமும் இணைந்து தொழில்நுட்பம் அடிப்படையிலான கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் 80,000 க்கும் மேற்பட்ட இளம் தலைமுறைக்கு அதிகாரம் அளிக்கின்றன





சென்னை: இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக மாற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முன்னணி இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான பூமி, அதன் பல்வேறு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்கள் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இந்திய இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்திய இளைஞர்களின் விருப்பங்ளைப் புரிந்துகொள்ளும் ஒரு பிராண்டாக புதுமை மற்றும் மாற்றத்தை ஒருங்கிணைக்க ரியல்மி எப்போதும் தயாராக உள்ளது. இந்த கூட்டிணைவு மூலம், சரியான திறன்கள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அதிகமான இளைஞர்களுக்கு பிரகாசமான மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்க ரியல்மி விரும்புகிறது, இந்த திட்டம் மூலம் பூமி அமைப்பு ஒரு பெரிய சமூகத்தை அடையவும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கவும், வெற்றிகரமான எதிர்காலத்திற்கு தேவையான திறன்களை அவர்களுக்கு கற்பிக்கவும் உதவும். 


பூமி ஃபெல்லோஷிப், சோஷியல் அண்ட் எமோஷனல் லேர்னிங் (SEL) புரோகிராம், ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ், இக்னைட் ஷெல்டர்ஸ் மற்றும் பூமி கிளப்ஸ் போன்ற இதன் முக்கிய திட்டங்களை பூமி அமைப்பு இந்த கூட்டாண்மை மூலம் மிகவும் பயனுள்ளதாக மாற்றும். கல்வி, தலைமைப் பண்பு மற்றும் குடிமை ஈடுபாடு ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதன் மூலம் பின்தங்கிய இளைஞர்களின் முழுமையான வளர்ச்சியை இந்தத் திட்டங்கள் உறுதி செய்கின்றன. சரியான கருவிகள், வளங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றின் மூலம் இளைஞர்களை மேம்படுத்துவதன் மூலம் பிரகாசமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை உருவாக்க ரியல்மி செயல்பட்டு வருகிறது.



பூமி பெல்லோஷிப்ஸ் என்பது ஒரு தனித்துவமான இரண்டு ஆண்டு ஊதிய அடிப்படையிலான திட்டமாகும், இது குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களில் கல்வி ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்க ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்த இளவயது மாற்றத்தை உருவாக்குபவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, இதன் கீழ் இளைஞர்கள் குறைந்த வளம் கொண்ட அரசாங்கப் பள்ளிகளில் நேரடியாக வேலை செய்கிறார்கள், மாணவர்களுக்கு அடிப்படை திறன்களைக் கற்பிக்கிறார்கள் மற்றும் ஆசிரியர்களை ஆதரிக்கிறார்கள், பெற்றோருடன் தொடர்புகொள்கிறார்கள், இதன் மூலம் பள்ளியின் முழுமையான மாற்றத்தை செயல்படுத்துகிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் தன்னார்வ தொண்டு அமைப்பான பூமியால் தொடங்கப்பட்ட இந்த ஃபெல்லோஷிப், ஒரு எதிர்கால தலைவர்களின் குழுவை உருவாக்குகிறது. இவர்கள் முறையான கல்வி சீர்திருத்தங்களில் நேரடியாக ஈடுபடுகின்றனர். 2020 முதல், இந்த திட்டம் 21 ஆசிரியர்களைச் சேர்த்துள்ளது மற்றும் 5,352 மாணவர்களை ஆதரித்துள்ளது. இந்த திட்டத்தில் தற்போதுள்ள 75 ஆசிரிய உறுப்பினர்கள், 13,017 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆதரிக்கின்றனர். இதில் முன்னாள் மாணவர்கள் உள்ளனர், இவர்கள் கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.. பூமி பெல்லோஷிப் சிறந்த பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் சமூக ஈடுபாடு மூலம் பள்ளிகளை மாற்றுவது மட்டுமல்லாமல், இது கல்வியில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கிறது.



சோஷியல் அண்ட் எமோஷனல் லேர்னிங் (SEL) புரோகிராம், மாணவர்களில் உணர்ச்சிப்பூர்வ முதிர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மையை வளர்க்கிறது மற்றும் அவர்களுக்குத் தேவையான வாழ்க்கைத் திறன்களைக் கற்பிக்கிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் கல்விச் சூழலை மேம்படுத்துவதே ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் திட்டத்தின் நோக்கமாகும். இக்னைட் ஷெல்டர்ஸ் தங்குமிட இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் வழிகாட்டுதலை வழங்குகின்றன. பூமி கிளப்ஸ் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடையே தன்னார்வ உணர்வையும் தலைமைத்துவப் பண்பையும் வளர்க்கின்றன.


இந்த கூட்டாண்மை குறித்து பேசிய பூமி அமைப்பின் நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி சீனிவாசன் கூறுகையில், "நீடித்த மாற்றத்தைக் கொண்டுவருவதில் கல்வியின் சக்தியை பூமி அமைப்பில் உள்ள நாங்கள் நம்புகிறோம். ரியல்மி மூலம், இந்த இலக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிகிறது. ரியல்மி உடன், நாங்கள் எங்கள் தொடுஎல்லையை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், எங்கள் திட்டங்களை நம்பமுடியாத அளவுக்கு வேகமாக செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவிலுள்ள இளைஞர்களுடனான அவர்களின் வலுவான பிணைப்பு மற்றும் சமூக மாற்றத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை இந்த கூட்டணியை உண்மையிலேயே சமூகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக ஆக்குகிறது. நாங்கள் ஒன்றாக இணைந்து, நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கற்றுக்கொள்ளவும், வளரவும், முன்னணி வகிக்கவும் பயனுள்ள வாய்ப்புகளை உருவாக்குகிறோம்.


இந்த கூட்டணி குறித்து ரியல்மி இந்தியாவின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி தாவோ ஜாங் கூறுகையில், "ரியல்மியில், தொழில்நுட்பத்தை மக்களை இணைக்கும் ஒரு கருவியாக மட்டும் பார்க்காமல், அவர்கள் எவ்வாறு வளர்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் வெற்றி பெறுகிறார்கள் என்பதை மாற்றுவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகவும் நாங்கள் பார்க்கிறோம். இளைஞர்களை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப பிராண்ட் என்ற வகையில், புதுமையான அம்சங்களை அறிமுகப்படுத்துவதைத் தாண்டி அடுத்த தலைமுறைக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் தீவிரமாக பங்களிப்பது எங்கள் பொறுப்பு என்று நாங்கள் நம்புகிறோம். பூமி அமைப்புடனான எங்கள் கூட்டாண்மை இந்நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது இளைஞர்களுக்கு கல்வி, திறன்கள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் உண்மையிலேயே அவர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும். பூமி அமைப்பின் இந்த சிறந்த பணியை ஆதரிப்பதிலும், புதுமைகளை சமூக மாற்றத்துடன் இணைக்கும் இந்தப் பணியில் ஒருவராக நாங்களும் இருப்பதில் பெருமைக் கொள்கிறோம்.


இந்த திட்டங்கள் மூலம் இந்தியாவில் 70,000 க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் 10,000 கல்லூரி மாணவர்களுக்கு தரமான கல்வி, அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்கள் மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளை பெறுவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர். பூமி அமைப்பும் ரியல்மி நிறுவனமும் சமூக மேம்பாட்டுக்கான தங்கள் உறுதிப்பாட்டை கூட்டாக மீண்டும் உறுதிப்படுத்துகின்றன, மேலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சமமான சமூகத்தை உருவாக்குவதில் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை உறுதி செய்கின்றன.


வீடியோவுக்கான இணைப்பு: https://www.instagram.com/reel/DITNDdfiJSm/?igsh=ZmljODZ1Nzc4Z2Qx 

பூமி அமைப்பு பற்றி

கல்வி மற்றும் சமூக மேம்பாடு மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டுவர உறுதிபூண்டுள்ள இந்தியாவின் முன்னணி இளைஞர் தன்னார்வலர்களால் நடத்தப்படும் சுயாதீன இலாப நோக்கற்ற அமைப்புகளில் பூமியும் ஒன்றாகும். 2006 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த பூமி அமைப்பானது, 15 க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 1,20,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு ஒரு தளமாக செயல்படுகிறது மற்றும் கல்வி, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, விலங்கு நலன் மற்றும் சமூக மேம்பாடு போன்றவைகளுக்கு பங்களிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. பூமி அமைப்பின் மிகச் சிறந்த திட்டமான இக்னைட் இந்தியா முழுவதும் 37,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு முழுமையான கல்வி ஆதரவை வழங்குகிறது. வார இறுதி தன்னார்வத் தொண்டு, நெறிப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம், மொழி, ஸ்டெம் (STEM), வாழ்க்கைத் திறன்கள் மற்றும் கலைகளில் துணைக்கல்வி வழங்குவதன் மூலம் பூமி அமைப்பு இளம் தலைமுறையை வளர்க்கிறது. கூடுதலாக, திறன் உதவி, புன்னகையைக் கொண்டு வாருங்கள் உதவித்தொகை மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முயற்சிகள் குழந்தைகளின் கல்விச் சூழலில் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு ஏற்ப, குடிமை ஈடுபாடு மற்றும் நிலைத்தன்மையில் பெரிய அளவிலான தன்னார்வ பங்கேற்பை பூமி அமைப்பின் கேட்டலைஸ் திட்டம் ஊக்குவிக்கிறது. எக்கோ சாம்ப்ஸ், பூமி சிவிக் கிளப் மற்றும் கல்வி உரிமை (RTE) விழிப்புணர்வு போன்ற திட்டங்கள் மூலம், சமூகத்தில் சிறந்த மாற்றத்தைக் கொண்டுவர இந்த அமைப்பு குடிமக்களை ஒன்றிணைக்கிறது. பூமி அமைப்பானது 2020 ஆம் ஆண்டில் பூமி பெல்லோஷிப்பை அறிமுகப்படுத்தியது, இது தலைமைத்துவ மேம்பாட்டுக்கான ஊதியம் அடிப்படையிலான பெல்லோஷிப் திட்டமாகும். இந்த திட்டத்தின் நோக்கம் ஒரு முழுமையான பள்ளி மாற்ற அணுகுமுறையின் மூலம் இந்தியாவின் கல்வி முறையை மாற்றுவதாகும். இத்திட்டம் கல்வி சவால்களை எதிர்கொள்வதற்கும் நிலையான மாற்றத்தை உருவாக்குவதற்கும் தேவையான திறன்களை மாற்றத்தை உருவாக்குபவர்களுக்குக் கற்பிக்கிறது கொண்டுள்ளது. இந்தியாவில் வேலை, இன்டர்ன்ஷிப் மற்றும் தன்னார்வத் தொண்டு வழங்கும் முதல் 20 தன்னார்வ தொண்டு அமைப்புகளில் ஒன்றாக அறியப்படும் பூமி, வெளிப்படைத்தன்மை, புதுமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அதன் அர்ப்பணிப்புக்காக பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. சமத்துவமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குதல் மற்றும் சமூகங்களை மாற்றியமைத்தல் மற்றும் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற குறிக்கோளுடன் பூமி அமைப்பு இளைஞர்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 


ரியல்மி பற்றி

ரியல்மி என்பது இளம் பயனர்களுக்கு அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் பிரீமியம் வடிவமைப்புகளை வழங்குவதில் உறுதிப்ப்பாடு கொண்டுள்ள ஒரு தொழில்நுட்ப பிராண்ட் ஆகும். 2018 இல் நிறுவப்பட்ட ரியல்மி 61 உலகளாவிய சந்தைகளில் வேகமாக விரிவடைந்து, 2023 க்குள் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை அடைந்துள்ளது மற்றும் 21 நாடுகளில் முதல் ஐந்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக பிரபலமாக உள்ளது. ரியல்மி நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகளே ஆன நிலையில், இந்தியாவில் 100 மில்லியன் ஷிப்மென்ட்டையும், உலகளவில் 200 மில்லியன் ஷிப்மென்ட்டையும் கடந்து சாதனைப் படைத்துள்ளது. ஒரு நிலையான நிறுவனமாக மாறுவதற்கும், பயனர்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டிய அம்சங்களை வழங்குவதன் மூலம் இளைய தலைமுறையினரிடையே தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்தும் ஒரு பிராண்டாக நற்பெயரை உருவாக்குவதற்கும் ரியல்மி "மேக் இட் ரியல்" என்ற உணர்வை வெளிப்படுத்துகிறது.


ரியல்மி நம்பர் சீரிஸ் 2024 இல் 18% வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்தது மற்றும் சிறந்த கேமரா திறன்கள், அடுத்த தலைமுறை செயல்திறன் மற்றும் பிரீமியம் வடிவமைப்பு ஆகிய அம்சங்கள் மூலம் இளைஞர்களை மிகச் சரியாக குறிவைப்பதன் மூலம் எண்ட்ரி-பிரீமியம் செக்மெண்ட்டில் கிட்டத்தட்ட 30% சந்தையைக் கைப்பற்ற முடிந்தது. 5G புரட்சியை முன்னெடுத்துச் செல்ல ரியல்மி உறுதிபூண்டுள்ளது மற்றும் 2024 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் ரியல்மியின் 5G ஸ்மார்ட்போன் ஷிப்மெண்ட் 168% வருடாந்திர வளர்ச்சியைக் காட்டியுள்ளது.


உலகின் வேகமான 320W சூப்பர்சோனிக் சார்ஜிங், ஹைப்பர்இமேஜ்+ எஞ்சினுடன் இன்டர்சேஞ்சபிள்-லென்ஸ் கான்செப்ட் மற்றும் 10x ஆப்டிகல் டெலிஃபோட்டோ ஜூம் கெபாபிளிட்டி, AI வாய்ஸ் பேஸ்டு ரீடச்சர் மற்றும் AI வீடியோ எரேஸர் போன்ற புதுமையான அம்சங்களுடன் ரியல்மி தொழில்நுட்பத்தில் புதுப்புது சாதனைகளைப் படைக்கிறது. 550+ விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்கள் மற்றும் முன்னணி ஆபரேட்டர்கள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களுடன் கூட்டாண்மை மூலம் ஸ்மார்ட் சாதனங்களின் எதிர்காலத்தை நம்பகத்தன்மையுடனும் லட்சியத்துடனும் ரியல்மி உருவாக்கி வருகிறது.


உலகப் புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களுடன் இணைந்து ரியல்மி டிரெண்ட்செட்டிங் வடிவமைப்புகளை உருவாக்குகிறது, இதன் தயாரிப்புகள் அழகாகவும் இருக்கும் அதே நேரத்தில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வருகின்றன. ரியல்மியின் ஜிடி சீரிஸ் நெக்ஸ்ட் லெவல் ஃப்ளாக்ஷிப் AI-பவர்டு பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது, ஆகவே பலதரப்பட்ட போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது, அதே நேரத்தில் நம்பர் சீரிஸ் நெக்ஸ்ட் ஜெனரேஷன் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் கேமராக்களின் கலவையுடன் வருகிறது, மேலும் P சீரிஸ் சிறந்த பெர்ஃபார்மென்ஸ், ஸ்டைல் மற்றும் நீண்ட கால பேட்டரி ஆயுள் ஆகிய அம்சங்களின் கலவையாக உள்ளது. நார்சோ சீரிஸ் ஹை-ரெஃப்ரெஷ் டிஸ்ப்ளே மற்றும் உகந்த பெர்ஃபார்மென்ஸ் அம்சங்களுடன் கேம் விளையாடுபவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் C சீரிஸ் இளைஞர்களுக்கு சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை வழங்குகிறது.


மேலும் தகவலுக்கு www.realme.com/in/ வலைத்தளத்தைக் காணவும்.  


படம் (தேவைப்பட்டால்):பூமி அமைப்பின் படங்கள்


Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

PRESTIGE HOTEL VENTURES LIMITED FILES DRHP WITH SEBI

Apollo Children’s Hospital Organises Inclusive Zoo Trip for Children with Special Needs

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

HCLTech தனது ஆரம்பகால தொழில் திட்டமான TechBee-க்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

Apollo Cancer Centres Launches ‘ColFit’, A Comprehensive Colorectal Cancer Screening Program Amidst Rising Cases

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது