ஆரம்பகால எழுத்தறிவு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற வகையில் கங்காரு கிட்ஸ், சென்னையில் 6 மையங்களில் விஜயதசமியைக் கொண்டாட உள்ளது

 ஆரம்பகால எழுத்தறிவு மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற வகையில் கங்காரு கிட்ஸ், சென்னையில் 6 மையங்களில் விஜயதசமியைக் கொண்டாட உள்ளது

சென்னை, செப்டம்பர் 25, 2025: இந்தியாவின் தலைசிறந்த சர்வதேச பாலர் பள்ளி நிறுவனமான கங்காரூ கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரி ஸ்கூல், ஒரு குழந்தையின் கல்விப் பயணத்தின் துவக்கத்தைக் குறிக்கிற ஒரு புனிதமான இந்திய மரபான விஜயதசமியைக் கொண்டாட உள்ளது. சென்னையில் குறிப்பாக தென்னிந்தியாவில் வித்யாரம்பம் என்று அறியப்படுகிற இந்தப் பழமையான சடங்கு, எழுத்துக்கள் மற்றும் கற்றல் உலகில் குழந்தைகள் நுழைவதைக் குறிக்கிறது. குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்கவும், நம்பிக்கையுடன் வெளிப்படுத்தவும், மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வடிவமைக்கப்பட்ட அதன் சிறப்பு ICAN பாடத்திட்டத்தின் மூலம் அதன் உலகத் தரம் வாய்ந்த ஆரம்பகால குழந்தை பருவ கல்வி தத்துவத்துடன் கலாச்சார பாரம்பரியத்தை கலப்பதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்ற வகையில், 150க்கும் மேற்பட்ட மாணவர்களை ஈடுபடுத்துகின்ற இந்த கொண்டாட்டம், அடையாறு, அண்ணாநகர், ஐயப்பன்தாங்கல், மடிப்பாக்கம், பெரம்பூர் மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள கங்காரூ கிட்ஸ் மையங்களில் நடைபெறும்.   

கங்காரூ கிட்ஸ் இல் நடைபெறும் இந்த விஜயதசமி கொண்டாட்டம், வழக்கமான வகுப்பறை நடைமுறைகளைத் தாண்டிய, வளமான கற்றல் அனுபவங்களை உருவாக்கும் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும். பாரம்பரிய பழக்கவழக்கங்களை அதன் தனியுரிம சர்வதேச கல்வியியலுடன் சிந்தனையுடன் இணைப்பதன் மூலம், அவர்கள் எழுத்தறிவுக்கு மட்டும் அறிமுகப்படுத்துவது மட்டுமல்லாமல் முழுமையான வளர்ச்சியின் ஒரு பயணத்தையும் துவங்க ஊக்குவிக்கப்படுகின்ற ஒரு சூழலை கங்காரூ கிட்ஸ் குழந்தைகளுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு குழந்தையும் சமூக, உணர்வு ரீதியான மற்றும் அறிவாற்றல் சார்ந்த வளர்ச்சியுடன் கல்வியில் சிறந்து விளங்குவதை வளர்க்கும் ஒரு வலுவான அடித்தளத்துடன் தங்கள் கல்விப் பாதையைத் தொடங்குவதை இந்த தனித்துவமான அணுகுமுறை உறுதி செய்கிறது.

விஜயதசமி கொண்டாட்டத்தை ஒரு மறக்கமுடியாத அனுபவமாக மாற்ற, கங்காரூ கிட்ஸ், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கின்ற வகையில் ஒரு தொடர்ச்சியான ஈடுபாட்டுடன் கூடிய செயல்பாடுகளை ஏற்பாடு செய்யும். கல்வி 


உலகில் அவர்களின் அடையாள நுழைவைக் குறிக்கின்ற வகையில், குழந்தைகள் தங்கள் முதல் எழுத்துக்களை தானியங்களில் அழகாக பொறித்திருப்பார்கள். முறையான கல்வியில் அவர்களின் முதல் படியை மேலும் வளப்படுத்துகின்ற சடங்குகளைத் தொடர்ந்து, கல்வியாளர்கள், குழந்தைகளை ஊடாடும், விளையாட்டு சார்ந்த கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவர். இளம் மாணவர்களிடையே மகிழ்ச்சி, ஆர்வம் மற்றும் கற்றலின் மீதான அன்பை வளர்க்கின்ற அதே வேளையில், கல்வியின் முக்கியத்துவத்தையும் புகுத்துவதில் கவனமாக வடிவமைக்கப்பட்ட இந்த அனுபவம் உதவும்.

லைட் ஹவுஸ் லேர்னிங் (கங்காரூ கிட்ஸ் இன்டர்நேஷனல் ப்ரி ஸ்கூல்) Pre-K Division, தலைமை நிர்வாக அதிகாரி, KVS ஷேஷசாய் கூறுகையில், கங்காரூ கிட்ஸ் இல், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் பயணத்திலும் உள்ள ஒவ்வொரு கட்டத்தையும் வளர்ப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். கலாச்சார மரபுடன், எதிர்கால கற்றலின் வாக்குறுதியை இணைக்கும் ஒரு அற்புதமான பாரம்பரியமாக விஜயதசமி இருக்கிறது. வரவிருக்கும் உலகத்திற்குத் தயாராக இருக்கும், ஆர்வமுள்ள, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் நன்கு வளர்ந்த கற்பவர்களை ஆயத்தப்படுத்துகின்ற எங்கள் அர்ப்பணிப்பு கல்வியைத் தாண்டி விரிவடைகிறது."என்று கூறினார்.

சிறப்பு ஆரம்பகால குழந்தை பருவ கல்வியில் ஒரு முன்னோடியாக அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்துகின்ற இந்த முயற்சியின் மூலம், கங்காரூ கிட்ஸ், பாரம்பரியத்தின் மீதான ஒரு மரியாதை, கண்டுபிடிப்புக்கான ஆர்வம் மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் மீதான ஒரு அன்பு ஆகியவற்றை குழந்தைகளுக்குள் உட்புகுத்துவதன் மூலம் ஆரம்பகால கற்றலின் அடித்தளத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

Yamaha Hosts First-Ever ‘Mileage Challenge’ for FZ-S Fi Hybrid in Chennai

ஓட்டுநர் வசதியை மேம்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் அதன் டிரக் வரிசையில் குளிரூட்டப்பட்ட கேபின்கள் மற்றும் கௌல்களை அறிமுகப்படுத்துகிறது

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

Medtronic unveils next generation Micra™ AV2 and Micra™ VR2 leadless pacemakers in India