தென் மாநிலங்கள் கணைய புற்றுநோய் வியாதிகளில் ஒரு தொடர்ந்த அதிகரிப்பைக் காண்கின்றபடியால் முன்கூட்டிய பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள நிபுணர்கள் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்

 

தென் மாநிலங்கள் கணைய புற்றுநோய் வியாதிகளில் ஒரு தொடர்ந்த அதிகரிப்பைக் காண்கின்றபடியால் முன்கூட்டிய பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள நிபுணர்கள் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர்


இந்த உடல்நலப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய, கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை மிகவும் திறம்பட செய்வதற்கு, புதுச்சேரி ஜிப்மர் இல் உள்ள வல்லுநர்கள் ஒரு புதிய ரோபோ-உதவி அறுவை சிகிச்சை நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்

சென்னை - நவம்பர் 20, 2024: உலக கணையப் புற்றுநோய் தினத்தில், தென்னிந்தியா முழுவதும் கணைய புற்றுநோய் வியாதிகள் குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த பத்தாண்டுகளில் தென் மாநிலங்களில் கணையப் புற்றுநோயின் பாதிப்பு 30% அதிகரித்துள்ளது, இந்தியாவில் ஆண்டுதோறும் 50,000 புதிய புற்றுநோய் வியாதியஸ்தர் கண்டறியப்படுகின்றனர். இந்த ஆபத்தான போக்கு, முன்கூட்டிய பரிசோதனை மற்றும் பயனுள்ள சிகிச்சை விருப்பங்களின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்ற வகையில் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க சுமையை ஏற்படுத்துகிறது.

அதிக இறப்பு விகிதத்திற்கு அறியப்பட்ட கணைய புற்றுநோய், வயிற்று வலி, மஞ்சள் காமாலை மற்றும் விவரிக்க முடியாத எடை இழப்பு போன்ற நுட்பமான ஆரம்ப அறிகுறிகளால் பெரும்பாலும் ஒரு முற்றிய நிலையில் கண்டறியப்படுகிறது. நாள்பட்ட கணைய அழற்சி, புகைபிடித்தல், உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நிலவும் ஆபத்து காரணிகள் இந்த அதிகரித்து வரும் நிகழ்வுகளுக்கு பங்களிக்கின்றன. இந்த அவசர சுகாதார நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், ஜிப்மர் இன் ஒரு முன்னணி ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் கலையரசன், கணையப் புற்றுநோய்க்கான சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு மேம்பட்ட துல்லியம் மற்றும் குறைக்கப்பட்ட சிக்கல்களின் அபாயம் 


ஆகியவற்றை வழங்கும் ஒரு புரட்சிகரமான ரோபோடிக் அறுவை சிகிச்சை நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த புதிதாக தரப்படுத்தப்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சை நுட்பம், அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிக்கலான pancreaticoduodenectomy (PD) ஐ குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் செய்ய அனுமதிக்கின்ற அதிநவீன டா வின்சி ரோபோடிக் அமைப்பைப் பயன்படுத்துகிறது. முன்னணி ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த துல்லியமான மற்றும் முறையான வாஸ்குலர் கட்டுப்பாட்டு நுட்பம், கட்டியை முழுமையாக அகற்றுவதை உறுதி செய்கின்ற வகையில் இரத்த இழப்பைக் குறைக்கிறது மற்றும் R0 பிரித்தெடுத்தல் விகிதங்களை கணிசமாக மேம்படுத்துகிறது. டாக்டர் கலையரசன் இந்த நுட்பத்தின் நன்மைகளை வலியுறுத்திக் கூறும்பொழுது, "இந்த அணுகுமுறை சிக்கலான உடற்கூறியல் கட்டமைப்புகளுக்குள் இணையற்ற துல்லியத்துடன் வழிநடத்த எங்களை அனுமதிக்கிறது. கணைய புற்றுநோயால் கண்டறியப்பட்டவர்களுக்கு இந்த நுட்பத்தை ஒரு முக்கிய விருப்பமாக மாற்றுகின்ற வகையில் நோயாளிகள் குறைவான வலியை உணர்கின்றனர், மருத்துவமனை தங்குதலைக் குறைக்கிறது மற்றும் விரைவாக குணமடைகின்றனர். இன்னும் கூடுதலாக, டா வின்சி தொழில்நுட்பத்தின் இந்த துல்லியமானது ஒட்டுமொத்த நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதற்கு முக்கியமானதாக இருக்கின்ற சிக்கல்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கிறது."என்றார்.

இந்த புதுமையான அணுகுமுறை உயிர்களைக் காப்பாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது, இது சமீபத்திய வழக்கு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நுட்பத்தின் உயிர் காக்கும் திறனை ஒரு சமீபத்திய நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. நாள்பட்ட கணைய அழற்சியின் பின்னணியில் மேம்பட்ட கணைய புற்றுநோயுடன் கண்டறியப்பட்ட ஒரு 58 வயதான நோயாளி ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், இதன் விளைவாக முழுமையான கட்டி அகற்றப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த தொழில்நுட்பத்தின் உருமாறும் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்ற துணையூக்கி கீமோதெரபியின் முன்கூட்டிய துவக்கத்தின் மூலம் இந்த நோயாளி வெறும் ஐந்து நாட்களுக்குள் வீடு திரும்ப முடிந்தது.

 "இந்த உலக கணைய புற்றுநோய் தினத்தில், இந்த தீவிர நோய் மற்றும் அதை எதிர்த்துப் போராடும் புதுமையான தீர்வுகள் பற்றிய 


விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமானதாக இருக்கிறது. ஜிப்மர் இல் ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்பட்ட முன்னேற்றங்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஒரு நம்பிக்கையின் வழிகாட்டியாக விளங்குகிறது, இது தொடர்ந்த ஆராய்ச்சி, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை விருப்பங்களின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று டாக்டர் கலையரசன் மேலும் கூறினார்.

அண்டை மாநிலங்களில் இருந்து நோயாளிகளின் கணிசமான வருகையுடன், தென்னிந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனை சுற்றுச்சூழல் அமைப்பின் அடித்தளமாக ஜிப்மர் உள்ளது. சுற்றியுள்ள மாநிலங்களில் இருந்து ஒரு கணிசமான வருகையைக் காண்கின்ற ஜிப்மர் இந்தியாவின் தென் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை சுற்றுச்சூழல் அமைப்பின் அடித்தளமாக உள்ளது. ஜிப்மர் இல் ரோபோடிக்-உதவி அறுவை சிகிச்சை (RAS) நடைமுறைகளை மேற்கொள்ளும் நோயாளிகளில் சுமார் 60% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 30% பேர் பிற தென் மாநிலங்களிலிருந்து வந்தவர்கள். சிக்கலான நோய்களைக் கையாளும் வசதி கொண்ட ஒரு மத்திய அரசு மருத்துவமனையாக இருப்பதால், ஜிப்மர் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து ஏராளமான பரிந்துரைகளைப் பெறுகிறது. இந்த மேம்பட்ட ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணைய புற்றுநோய்க்கான 100 அறுவை சிகிச்சைகளை இந்த மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது. இந்த மைல்கல் உயர்தர பராமரிப்புக்கான ஜிப்மர் இன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் பிராந்தியத்தில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சையில் முன்னணியில் உள்ளது.


Comments

Popular posts from this blog

Apollo Cancer Centres Launches Dedicated Robotic Pancreatic Surgery Program

BPCL Dealer network launches “Fuelling the Festive Spirit” Campaign

ABD Delivers Strong Performance in Q2FY26 Driven by Accelerated Premiumization

O2 Health Studio Celebrates 24th Annual Day with a Grand Finale – Miss O2 Man 2025

இந்தியர்களுக்காக எளிய ஆனால் சத்தி வாய்ந்த ‘Guaranteed Bachat Plan’-ஐ அறிமுகப்படுத்தும் பார்தி AXA லைஃப் இன்சூரன்ஸ்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பக்கவாத சிகிச்சை வசதி: சென்னை அப்போலோ மருத்துவமனை சென்னையில் பரவலாக 9 மேம்பட்ட ஆய்வகங்களுடன் உயிர்களைக் காக்கவும் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் பக்கவாத சிகிச்சையை விரிவுபடுத்துகிறது!

Apollo Cancer Centre, Chennai, and Apollo Proton Cancer Centre, Turns Chocolates into Health Reminders with ‘Check-Olate’—A Sweet Pause That Could Save Your Life

Tamil Nadu’s Largest Stroke Network: Apollo Hospitals Chennai Expands Stroke Care Across the City with 9 Advanced Labs to Save Lives and Restore Hope

A SAUCY START TO 2026 WITH KFC INDIA’S ALL-NEW DUNKED RANGE

Chennai Retail Summit 2025: RAI Showcases Innovation and the Next Phase of Retail