ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது
ராபி 2025-26க்கான விவசாயிகள் விழிப்புணர்வை வலுப்படுத்த PMFBY யின் பயிர் காப்பீட்டு வாரத்தை எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், ஆதரிக்கிறது சென்னை, 04, டிசம்பர் 2025: இந்தியாவின் முன்னணி பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் (பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா PMFBY) கீழ், வரவிருக்கும் பயிர் காப்பீட்டு வாரத்தில் தீவிரமாக பங்கேற்க இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்துள்ளது. இந்த ஒரு வார கால கொண்டாட்டம், பயிர் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்த விவசாயிகளின் புரிதலை ஆழப்படுத்தவும், அவர்களின் விவசாய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க PMFBY திட்டத்தை சிறப்பாக பயன்படுத்த உதவுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்டம், ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள ஒதுக்கப்பட்ட மாவட்டங்கள் முழுவதிலும் பல்வேறு செயல்பாடுகளை இந்த நிறுவனம் நடத்தும். பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் அம்சங்கள், காப்பீட்டு விவரங...